Saturday, September 22, 2012

ஆபத்தான பயணம்...


வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது,
நெரிசலான சந்திப்பில்
தானியங்கி சிக்னல் வேலை செய்யவில்லை...
போக்குவரத்து காவலாளியும் இல்லை...

எத்திசையில் எவரும் எப்போதும் செல்லலாம் என்ற நிலை...

விளைவு,
ஒரு சில விபத்துக்கள்..
முடிவில் உயிர் சேதம்... 

இந்த வேதனையோடு வந்து கொண்டிருக்கும் போது மனதில் தோன்றியது...

நமக்கும்...,
பரிசுத்த ஆவியானவர் என்ற தானியங்கியும்,
மூப்பர்/மேய்ப்பர் என்ற காவலாளியும்..
எத்துனை முக்கியம்

நாம் நீதியின் பாதையில் விதிகளை மீறாமல் நடக்க பரிசுத்த ஆவியானவர் என்ற தானியங்கி உதவுகிறார்...

அவரது விதிகளை அசட்டை செய்தால் அமைதியாகிவிடுகிறார்...
அப்போது மேய்ப்பர் என்ற காவலாளி தானியங்கி இயங்கவில்லை என்று அறிந்து, நம் நிலையை உணர்ந்து நாம் சரியே இயங்க ஆலோசனை தருகிறார்..

இப்போ சொல்லுங்க இவ்விரண்டில் எதை தவிர்த்தாலும் ஆபத்து தானே..?

No comments:

Post a Comment