Saturday, February 25, 2012

இஸ்லாமிய சகோதரருக்கு கொடுத்த லிப்ட்

விலை ஏறப்பெற்ற திருஇரத்தமே
அவர் விலாவினின்று பாயுதே..
விலையேறப் பெற்றோனாய் என்னை...மாற்ற
விலையாக ஈந்தனரே....

என்று பாடிக் கொண்டே என் நீண்ட பயணத்தின் பாதி தூரத்தைக் கடந்துவிட்டேன். இன்னும் பாதி தொலைவு செல்ல வேண்டுமே என்ற சோர்வு சரீரத்தை தாக்கிக்கொண்டிருந்த போது ஐந்து நெடுஞ்சாலைகள் சந்திக்கும் ஒரு பாலத்தை நோக்கி என் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன். பாலத்தின் மைய பகுதியில் டீசண்டாக உடை உடுத்திய ஒருவர் ஒரு கையில் லாப்டாப்புடன்  தன்னை கடக்கும் எல்லா வாகனத்தின் முன்பும் மற்றொரு கையை அசைத்து லிப்ட் கேட்டுக் கொண்டிருந்தார். மின்னல் வேகத்தில் வாகனங்கள் பறந்து கொண்டிருக்க அவரை யாரும் கண்டுகொண்டது போல தெரியவில்லை. நான் அவரை கடந்த போது என்னை நோக்கி கைகளை அசைத்து ஒரு எதிர்ப்பார்ப்போடு சைகை காட்டினார்., எனினும் மனம் கேட்கவில்லை. வண்டியின் வேகத்தைக் குறைத்து ஓரமாக சற்று சிரமத்துடன் நிறுத்தினேன். நான் வாகனத்தின் வேகத்தைக் குறைக்க ஆரம்பிக்கும் போதே அவர் என்னை நோக்கி ஓடத் தொடங்கி இருக்க வேண்டும். ஏனென்றால், நான் வண்டியை நிறுத்தி திரும்பி பார்த்தால் அவர் என் அருகில் நிற்கிறார். 45 வயதுக்கு ஏற்ற தோற்றம். ரொம்ப தேங்க்ஸ்! ரொம்ப நேரம் இங்கேயே நின்றுகொண்டிருக்கிறேன். என் நண்பர் ஒருவர் இங்கே இறக்கிவிட்டார். பக்கத்துல எந்த பஸ் ஷ்டாப்பும் இல்ல. யாரும் லிப்டும் தரல. என்னை அருகில் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டால் போதும்என்று சொல்லி வண்டியில் ஏறி உட்கார்ந்து பெருமூச்சு விட்டார். அவர் வேதனை புரிந்ததும், வண்டியை நிறுத்தியது குறித்து சந்தோஷப்பட்டுக் கொண்டேன். நீங்க எங்க போகணும், நான் போற வழியா இருந்தா உங்கள இறக்கி விடறேன்என்று சொன்னதும் அவர் கொஞ்சம் உற்சாகத்தோடு தான் செல்ல வேண்டிய இடத்தைச் சொன்னார். நானும் அந்த வழியா தான் போறேன், உங்கள அங்கேயே விட்றேன்என்று சொல்லி வெகு தூரம் தனியாக செல்லும் எனக்கு ஒரு கம்பனி கிடைத்துவிட்டது என்று உற்சாகமாக வாகனத்தை செலுத்தினேன்.என் உடல் சோர்வு வாகனத்தை நிறுத்த இடம் தரவில்லை

நீ கவர்திழுப்பவனானால்.....!


துறைமுகத்துக்கு விடை கொடுத்துப் பிரிந்து போகும் கப்பலை மினுக்கு உடை உடுத்தியவர் பரபரப்போடு பார்த்துக்கொண்டிருந்தார். அவரை நோக்கி வந்த மற்றொரு வயதானவர், “ஏன் இத்தனை பரபரப்பு? கப்பலில் ஏதேனும் அனுப்பியிருக்கிறீர்களா?” என்று வினவியதும் சற்று சுதாரித்துக்கொண்டு தான் செய்திருக்கும் தியாகச் செயலைப் பெருமையோடு என் எல்லா சொத்தையும் விற்று சோமாலியாவிற்கு பத்து கோடி மதிப்புள்ள பொருட்களை ஊழியத்திற்காக அனுப்பி வைத்திருக்கிறேன் என்றார். அதற்கு வயதானவர் நானும் ஒரு பொருளை அனுப்பியிருக்கிறேன் என்று சொல்லி அமைதியாய் கப்பலுக்கு விடை கொடுத்தார். அப்படி என்ன ஒரு பொருள் அனுப்பி இருக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு, பொறுமையுடன் பெரியவர் சொன்னார் என் ஒரே மகளை சோமாலியாவிற்கு ஊழியம் செய்ய அனுப்புகிறேன் என்றார். மினுக்கு உடைக்காரரின் தியாக உணர்வு, வயதானவரின் தியாகத்திற்கு முன் பனி மேல் பாய்ந்த உஷ்ணம் போல் கரைந்துவிட்டது.
ஆம்நாமும் கூட கிறிஸ்த்துவின் ஊழியத்திற்கு செய்யும் உதவிகளையும்கைமாறுகளையும் தியாகமாக எண்ணிவிடுவது உண்டு. நம்முடைய உதவிப் பொருளோ செல்வமோ கவர்ந்திழுக்கும் தியாகமாக இருக்குமா என்பது ஐயமே. ஆனால் உன்னத நோக்கத்திற்காக நம்மையே கொடுத்துவிடுவது அனைவரயையும் கவர்ந்திழுக்கும் தியாகமாக அமைந்துவிடும். அப்படிப்பட்ட கவர்ந்திழுக்கும் தியாகி தான் எப்பாப்பிரோதீத்து.

Saturday, February 4, 2012

சென்னை வாழ் நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன சூப்பர் கதை


நடிகர். ரஜினிகாந்த் அவர்களின் சிறப்பம்சம் அவர் நடிப்பும் ஸ்டைலும் மட்டும் அல்ல. அவர் பேசும் போது இடை இடையே சொல்லும் சிறு கதைகளும் சிறப்பு தான். அவரைப் பிடித்க்காதவர்கள் கூட அவர் சொல்லும் கதைகளை ரசிப்பது உண்டு. ஒன்று. இந்த கதைகள் சிந்திக்க தூண்டும் வகையில் அமைந்துவிடும். இதுபோல சமீபத்தில் ஒரு பாராட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பேசும் போது சொன்ன கதை ஆச்சரியமாகவும் சுவாரசியமாகவும் இருந்தது.
ஒரு இரவு வேளையில் இருவர் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்களாம். இருவரும் அருகில் உட்கார்ந்து இருந்தனர். அதில் ஒருவர் புத்தகம் ஒன்றை படித்து கொண்டிருக்க மற்றொருவர் அதை கவனித்துக் கொண்டிருந்தாராம். அவர்கள் இருவரின் உரையாடல் இதோ உங்களுக்காக ரஜினி சொன்ன பாணியில் .........

நபர் 1: ஐயா வணக்கம், இருவரும் வெகு தூரம் ஒன்றாக பயணம் செய்யப்போகிறோம் நாம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்வது நல்லது. நான் ஒரு விஞ்ஞானி, உங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாமா?

நபர் 2: (அமைதியான முகத்தோடு) சொல்லிக்கொள்ளும் அளவில் நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லைஎன்று சொல்லி கையில் உள்ள புத்தகத்தை தொடர்ந்து வாசிக்க தொடங்கினார்.